Breaking News
recent

அகண்ட பாரதத்தை முஸ்லிம்கள் உருவாக்கியது போல் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த அப்துல் கலாம் இந்தியாவை அணுஆயுத வல்லரசாக உருவாக்கி சிறப்பின் சிகரத்தில் அமர வைத்துவிட்டு உலகில் இருந்து விடை பெற்றிருக்கிறார்.!


இந்தியாவின உயர்விர்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு கால கட்டங்களில் முஸ்லிம்கள் அயாராது உழைத்துள்ளனர்

இந்தியா என்ற அகண்ட ஒரு நாட்டை உருவாக்கியவர்களும் அதை கட்டியழுப்பியவர்களும் முஸ்லிம்களே !

குமரி முதல் இமயம் வரை இந்தியா ஒரு நாடே என்ற பெருமை நிறைந்த முழக்கத்தை நாம் செவியுறுகிறோம் 

ஆனால் குமரி முதல் இமயம் வரை மட்டும் இல்லாமல் பாக்கிஸ்தானையும் வங்காள தேசத்தையும் இணைத்த ஒரு அகண்ட பாரதத்தை உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள் 

முஹலாய மன்னர்களின் வருகைக்கு முன்னால் குமரி முதல் இமயம் வரை இந்தியா ஒரு நாடாக இருக்கவில்லை 

நாம் வாழும் தமிழகமே சேர நாடு சோழ நாடு பல்லவ நாடு பாண்டிய நாடு என ஒரு 50 துண்டுகளாகவாவது இருந்திருக்கும் 

தமிழகமே இத்தனை துண்டுகளாக இருந்தது என்றால் இந்தியா எத்தனை துண்டுகளாக நொறுங்கி கிடந்திருக்கும் என்பதை நீங்கள் எண்ணி பாருங்கள் 

இப்படி நொறுங்கி கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்து அகண்ட பாரதமாக உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள்

இந்தியாவை கட்டுயழுப்பியது போலவே இந்தியா அணுஆயுத வல்லரசாக உருவாகுவதர்கும் ஒரு முஸ்லிமின் உழைப்பே அடிப்படையானது

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் முக்கிய பங்களிப்பில் நடத்தபட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகுதான் இந்தியா உலக அரங்கில் வலிமையுடன் உயர்ந்து நின்றது

அந்த நிகழ்வு க்கு பிறகு தான் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க ஆரம்பித்தது 

ஏவுகளை தொழில் நுட்பமானாலும் ராக்கெட் தொழில் நுட்பமானாலும் அணுஆயுத தொழில் நுட்பமானாலும்
அனைத்தையும் இந்தியாவிர்கு வழங்கியதில் அப்துல் கலாமின் பங்கு அளபெரியது 

இந்த தொழில் நுட்பங்களை இந்தியாவிர்கு வழங்கி இந்தியாவை சிறப்பின் சிகரத்தில் அமரவைத்து உலகில் இருந்து விடை பெற்றிருக்கிறார் அப்துல் கலாம்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.