Breaking News
recent

இனி முகநூலில் முகத்தை மறைக்க முடியாதே.!


முகநூலில் பக்கத்தில் உள்ள பலர் தன் முகத்தை மற்றவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக கொஞ்சம் தெளிவு இல்லாமல் அல்லது முகத்தை மட்டும் மறைத்து போட்டோக்களை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். 

இப்படி முகநுால் பக்கத்தில் வரும் தெளிவில்லாத போட்டோக்களை மிகத் தெளிவாக, இவர் யார் என்று அடையாளம் காட்டும் தொழில்நுட்பத்தை அடுத்த மாதம் முதல் முகநுால் பக்க நிர்வாகம் புகுத்த உள்ளது.

இதை முகநூல் நிர்வாகத்தின் , ‘பேஸ்புக் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் டீம்’ நேற்று அறிவித்துள்ளது. 

இதன் மூலம் பேக் ஐடி எனப்படும் முகநூல் பக்கத்தில் போலியான பக்கத்தைப் பராமரிக்கும் நபர்கள், அல்லது ஏமாற்று கணக்குகள் பெண்களின் போட்டோவைத் திருடி அதில் தலையை மட்டும் வெட்டியெடுத்து மார்பிங் செய்து தவறான சைட்களில் அரேங்கேற்றுவது, 

தன் முகத்தை மட்டும் மறைத்து அல்லது அதில் கருப்புத் தடவும் நபர்கள், தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் ஆகியோரை இந்தத் தொழில்நுட்பம் தெளிவாக அடையாளம் காட்டும் என்று இந்த டீம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதை உடல் / நிறம் / உடை போன்ற 100 வகை காம்பினேஷன்களை உள்ளடக்கித் தயாரித்த இந்த மென்பொருள், ப்ளிக்கர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட 37 ஆயிரம் போட்டோக்களை பயன்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இதில், 87% ரிசல்ட் சரியாக கிடைத்தது. இதையடுத்து, இந்த மென்பொருளை முகநுால் பக்கத்தில் பயன்படுத்த அந்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 இதனால், முகநூலில் முகம் தெரியாமல் இருக்கும் நிறைய முகம் மறைக்கபட்ட போட்டோக்களின் சரித்திரம் பூகோளம் இனிமேல் பப்ளிசிட்டியாகிவிடும் என்பதுதான் உண்மை.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.