என்று சிவசேனா தனது கட்சி நாளிதழ் சாம்னாவில் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்
என்று சாத்வி தேவா தாகூர் வார்த்தைக்கு ஆதரவு தெரிவித்துள்ள சிவசேனா, அவர் குடும்பக் கட்டுப்பாடு வேண்டும் என்பதை குறிப்பிட்டு இருக்கலாம் என்று தெரிவித்து ள்ளது.
“மிகவும் விரைவில், இந்தியாவின் இஸ்லாமிய மக்கள் தொகையானது அதிக இஸ்லாமிய மக்களை கொண்ட இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானைவிட அதிகரிக்கும்,
இதன்விளைவாக இந்துக்களின் நாட்டில் ஒரு கலாச்சார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்” என்று சிவசேனா குறிப்பிட்டுள்ளது.
இரண்டு மதங்களின் மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டுவர ஆண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை அல்லது குடும்பக் கட்டுப்பாடு மட்டுமே தீர்வு ஆகும்.
எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான அக்பருதீன் ஒவாய்சியை குறிப்பிட்டு, “ஒவாய்சி, தனது இஸ்லாமிய சகோதரர்கள் குறித்து கவலை கொண்டு இருந்தால்,
பின்னர் அவர் இஸ்லாமியர்கள் இடையே குடும்பக் கட்டுப்பாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும் மற்றும் பெண்களுக்கு புர்கா முறைக்கு ஆதரவு தெரிக்க வேண்டும்,”
என்று சிவசேனா தெரிவித்துள்ளது. மேலும் ஒவாய்சிக்கு அறிவுரை வழங்கி உள்ள சிவசேனா, “சிறிய குடும்பம் நல்ல முறையில் சாப்பிடவும் முடியும்,
வளர்ச்சியும் அடைய முடியும். சிறிய குடும்பம் குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும் உறுதி செய்யும்.” என்று கூறியுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து இதுபோன்று இஸ்லாமிய மக்கள் தொகையானது வளர்ந்து கொண்டே சென்றால், இது மற்றொரு பாகிஸ்தானை உருவாக்க வழிவகை செய்யலாம்,
இதனால் எப்போதும் வளர்ந்துவரும் இஸ்லாமிய மக்கள் தொகைக்கு ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கையை வழங்க முடியாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் ஆசம் கானின் பேச்சுக்கு (இஸ்லாமியர்கள் ஏழைகளாக இருப்பதாலே அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றனர்)
கண்டனம் தெரிவித்து உள்ள சிவசேனா “இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்கின்றனர், எனவே அவர்கள் ஏழைகளாக உள்ளனர்,” என்று தெரிவித்துள்ளது.
நாட்டை காப்பாற்ற, குடும்பக் கட்டுபாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடம் எடுத்துரைக்குமாறு இஸ்லாமிய தலைவர்களை சிவசேனா கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக