கொஞ்சம் சுன்னக்க்ம் ஏற்பட்டதை வைத்து சிறை துறை அங்கு உள்ள சிறை வாசிகளை கொடுமை படுத்தி வரும் நிலையில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் முதல் தீ பொறியை சிறைவாசிகள் குடும்பத்தை பேச வைத்து கோவையில் துவங்கியது அதன் தொடர்ச்சி சிறை வாசிகள் குடும்பத்தார்கள் தானாக வீதியில் இரங்கி போராட துவங்கினார்கள்
இப்போது வரை அந்த தீ வீரிமாயமாக உள்ளது சிறைவாசிகள் விசயத்தில் இது வரை கருத்து சொல்லாத தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் கூட அதன் நிலைமை புரிந்து கொண்டு தீர்மானம் போடும் வரை வந்து உள்ளது அதன் ஒரு பகுதியாக இந்திய தவ்ஹித் ஜமாஅத் முழுக்க முழுக்க சிறை வாசிகள் விடுதலை ஒற்றை கோரிக்கை மட்டும் வைத்து பல ஊர்களில் பொது கூட்டம் நடத்தி வருகிறது.
அதை போல் ஒற்றை கோரிக்கை உடன் மிக வீரியமாக மனித நேய மக்கள் கட்சி பிப்ரவரி 7 அன்று தமிழகத்தில் மூன்று இடத்தில் மிக பிரமாண்டமான போராட்டம் நடத்த உள்ளது இதிலும் இயக்கம் கட்சி பாகு பாடு பாராமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்
ஒரு பக்கம் தேசிய லீக் ரஹீம் அவர்கள் அமைப்பும் முடிந்த அளவு சிறைவாசிகள் விசயத்தில் போராடி வருகிறது இது இப்படி இருக்க ... யார் சிறைவாசிகள் விசயத்தில் போராடினாலும் இயக்கம் கட்சி பாராமல் சிறை வாசிகள் குடும்ப பெண்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்
அது எந்த ஊரில் நடந்தாலும் சிரம்பத்தை பார்க்காமல் சென்று போராடி வருகிறார்கள் ஒரு படி மேல் சென்று வருகின்ற பிப்ரவரி 7 போராட்டத்தை மக்கள் இடத்தில் கொண்டு செல்லும் வகையில் கோவையில் சிறைவாசிகள் குடும்பத்து பெண்களை வீதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்
ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அழைப்பு கொடுக்கிறார்கள் இது எல்லாம் அந்த சகோதர்களின் விடுதலை மட்டும் எண்ணி எண்ணி செய்து வருகிறார்கள் அதனால் எந்த இயக்கம் கட்சி போராடினாலும் பாகு பாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள் சகோதர்களை ..
இதை எல்லாம் தாண்டி ஒன்றை சொல்லி கொள்கிறோம் இதை ஒரு இயக்கத்தில் இருந்து இயக்கவாதியாக இல்லை சகோதரிகளின் நிலைமையை எண்ணி ஒரு சகோதரனாக சிறைவாசிகள் விசயத்தில் இவள்ளவு தூரம் கஷ்ட்ட படும்
அந்த சகோதரிகளின் வேதனையில் எந்த இயக்கமும் கட்சியும் தங்கள் தேவைக்கோ அல்லது சுயநலமாக இருந்தால் அக்கறை உள்ள ஒருவனும் சும்மா விட மாட்டோம் அது நான் சார்ந்த இயக்கமாக இருந்தாலும் சரி !! சிறைவாசிகள் விசயத்தில் அனைவரும் குரல் கொடுப்போம் சகோதரர்களை மீட்டு எடுப்போம் !!
நன்றி: A.யாசர் அரபாத் திருப்பூர்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக