www.khoyapaya.gov.in என்ற இணையத்தளத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி தொலைந்த குழந்தை குறித்த விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றலாம்.
இந்த இணையத்தளத்தை பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகமும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறையும் இணைந்து நிறுவியுள்ளது.
அந்தந்த ஊரில் உள்ள காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் மீட்பு மையம் உதவியுடன் இந்த இணையதளம் செயல்படும்.
லட்சக்கணக்கான மக்களை இணைக்கும் இந்த இணையதளத்தின் மூலம் குழந்தைகளின் படங்கள
வைத்து மிகவும் எளிதாக குழந்தைகளை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைக்க முடியும் என நம்பப்படுகிறது. தற்போது இந்த இணையதளம் ஆங்கிலத்தில் உள்ளது.
மிகவிரைவில் ஹிந்தி மற்றும் இதர பிராந்திய மொழிகளிலும் வரவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக