உலகிலேயே மிகப்பெரிய தாவரவியல் பூங்காவை சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உருவாக்க இருப்பதாக சவூதி அரசு உத்தியோக பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
21ம் நூற்றாண்டில் அதிநவீனமான முறையிலான கட்டிடக்கலையை ஒத்த சாயலுடனும் அமையப்பெறவுள்ளதுடன், ஆராயிச்சி கூடங்கள், அலுவலக விடுதிகள், கடைகள், உணவகங்கள், பார்வையாளர்களுக்கான வசதிகள் மற்றும் காட்சி தியேட்டர்கள் என பல்வேறுபட்ட வசதிகளை பார்வையாளர்களுக்கென அமைக்கப்படவும் உள்ளது.
மன்னர் அப்துல்லாஹ் சர்வதேச பூங்காவனம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன் , இதற்க்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் உலகிலேயே மிகப்பெரிய பூங்காவாக இது அமையும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
1 கருத்து:
உபயோகமான தகவல்கள்.வி.குமரகுருபரன் திருவாளப்புத்தூர்
கருத்துரையிடுக