பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள சிறப்பாசிரியர் பணிக்கு தகுதியுடைவர்கள் ஏப்.27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு ஆதிதிராவிட நல நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை, 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளில் 2013- 2014 ம் கல்வியாண்டில் தொகுப்பூதியத்தில் பகுதிநேர மற்றும் முற்றிலும் தாற்காலிக அடிப்படையில் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி, உடற்கல்வி -5, ஓவியம் -4, தையல் -1, இசை -1, கணினி -2, வாழ்வியல் திறன் -1 என மொத்தம் 14 பணியிடங்கள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு நகல், கல்விச் சான்றிதழ் நகல், சாதிச் சான்றிதழ் நகல், பிறந்த தேதிக்கான சான்றிதழின் நகலுடன் ஏப். 27 மாலை 5 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது தெர்வித்தார்
நன்றி:தினமணி
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு ஆதிதிராவிட நல நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை, 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளில் 2013- 2014 ம் கல்வியாண்டில் தொகுப்பூதியத்தில் பகுதிநேர மற்றும் முற்றிலும் தாற்காலிக அடிப்படையில் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி, உடற்கல்வி -5, ஓவியம் -4, தையல் -1, இசை -1, கணினி -2, வாழ்வியல் திறன் -1 என மொத்தம் 14 பணியிடங்கள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு நகல், கல்விச் சான்றிதழ் நகல், சாதிச் சான்றிதழ் நகல், பிறந்த தேதிக்கான சான்றிதழின் நகலுடன் ஏப். 27 மாலை 5 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது தெர்வித்தார்
நன்றி:தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக