உக்ரைன் நாட்டில், உறைபனியும் கடும் குளிரும் நிறைந்த உஸ்கோரட் (Uzhgorod) எனும் ஊரில் 'லூசி' (Lucy) என்ற பெண் நாய் அடிபட்டு நகர முடியாமல் ரயில்வே டிரேக் நடுவே பரிதவித்து வந்ததை கண்ட அதன் தோழனான 'பாண்டா' (Panda) என்ற ஆண் நாய், அடிபட்ட பெண் நாய் அருகிலேயே தொடர்ந்து 2 நாட்கள் காவல் காத்து உடல் சூடு ஆறாமல் பார்த்துக் கொண்டதுடன் ரயில்கள் வரும் போதெல்லாம் அதனுடன் சேர்ந்து டிரேக்கின் நடுவே தலைகுனிந்து படுத்து ரயில்கள் கடந்து போகும் வரை உடனிருந்ததன் மூலம் மனரீதியான தன்னம்பிக்கை அளித்து காப்பாற்றியுள்ளது.
பின்பு மக்களால் ரயில்வே டிரேக்கிலிருந்து பெண் நாய் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையிலும் ஆண் நாய் பிரியாமல் தொடர்ந்து அதனுடனேயே ஒன்றாக தங்கி வருகிறது. பெரும்பாலான மனிதர்கள் மறந்துவிட்ட இந்த நற்பண்பு தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் ஆச்சரியத்துடன் பகிரப்பட்டு வருகிறது.
Source: Dailymail
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக