ரமலானில் என்ன செய்யலாம் ..! என்ன செய்யக் கூடாது ..!
நமக்கு ரமலான் கிடைத்தும் அந்த ரமலானை நாம் நல்லவிதமாக கண்ணியப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு .. நம் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
நாம் அவரை எப்படி உபசரிப்போம் ..? எப்படி நாம் அவரை வரவேற்போம்..? அந்த விருந்தாளி நம் வீட்டில் சில நாட்கள் தங்க போகிறார். அந்த விருந்தாளி நம் வீட்டில் இருக்கும் காலமெல்லாம் நாம் அவரை நன்றாக கவனித்து , உபசரித்து , உண்ணவும், பருகவும் கொடுப்போம்.
அவர் நம் வீட்டில் இருந்த காலமெல்லாம் ரொம்ப சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். பிறகு அவர் புறப்படும் நேரம் வரும்போது . அந்த விருந்தாளி ரொம்ப மகிழ்ச்சியாக செல்வார். நமக்கும் அவரின் பிரிவு ரொம்ப மன கஷ்டமாக இருக்கும். இப்படித்தான் இருக்கவேண்டும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ரமலான் நம்மை விட்டு பிரியும்போது.
![]() |
| பெண்கள் அந்த ரமலான் மாதத்தில் ஷோபிங் போவது தவிர்த்துக் கொள்ளவும். ரமலான் வருவதற்கு முந்தி பர்சஸ் பண்ணுவது நல்லது! |
![]() |
| அப்படி போனாலும் பல மணிநேரம் ஒரு நாளிகை அங்கே கழிப்பது. அன்று நோன்பு வைக்காமல் போவது இது நல்லது அல்ல |
ரமலான் மாதம் கடைசியில் மறுநாள் பெருநாள் . அப்பொழுது பெரும்பாலும் மக்கள்கள் பெருநாளைக்காக பல வகையான உணவுகள் செய்வதில் அன்று இரவு முக்கியத்துவம்
கொடுக்கிறார்கள். அந்த பெருநாள் இரவை சமைப்பதில் நேரத்தை கழிப்பதை தவிர்த்து கொள்ளவும். அந்த இரவில் அதிகம் அதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும். கூலி கொடுக்கும் நாள் அந்த இரவுதான் .
ரமலானில் செய்ய கூடிய காரியங்கள் /அமல்கள் ..
அல்ஹம்துலில்லாஹ் !!!
அல்லாஹ் மிக்க அறிந்தவன் ..















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக