Breaking News
recent

உணவை செய்தி தாள்­களில் வைத்து கொடுக்க தடை!


செய்தித் தாள்­களில், உண­வு­களை, ‘பேக்’ செய்­வதால் ஏற்­படும் ஆரோக்­கிய பாதிப்பு குறித்து, மக்­க­ளிடம் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த வேண்டும்’ என, இந்­திய உணவு தரக் கட்­டுப்­பாட்டு அமைப்பு, அனைத்து மாநி­லங்­களின் உணவு பாது­காப்பு அமைப்­பு­க­ளுக்கு கடிதம் எழு­தி­யுள்­ளது.


அதன் விபரம்:செய்தித் தாள்­களில் பயன்­ப­டுத்தும், ‘மை’ உடல் நல­னுக்கு ஊறு­வி­ளை­விக்கும். அதில், வண்ணம் உள்­ளிட்ட பிற ரசா­யனப் பொருட்­களின் சேர்க்கை உள்­ளது. 

உணவுப் பொட்­ட­லங்­க­ளுக்கு, இத்­த­கைய செய்தித் தாள்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக, உணவு தொழிலில் உள்ள, அமைப்பு சாரா துறை­யினர், உணவை பொட்­டலம் கட்ட, செய்தித் தாள்­களை உப­யோ­கிக்­கின்­றனர்.

அது போல, தின்­பண்­டத்தில் உள்ள எண்­ணெயை உறிஞ்­சவும், பலர் செய்தித் தாள்­களை பயன்­ப­டுத்­து­கின்­றனர். இதனால், தின்­பண்­டங்­களில், ரசா­யனப் பொருட்கள் கலந்து, அவற்றை உண்­போரின் ஆரோக்­கியம் பாதிக்­கப்­ப­டு­கி­றது. 

இத்­த­கைய அபா­ய­க­ர­மான பயன்­பாட்டை குறைக்க, உணவு தயா­ரித்து விற்­பனை செய்வோர் மற்றும் நுகர்­வோ­ரி­டையே விழிப்­பு­ணர்வு பிர­சா­ரங்­களை, மாநில மற்றும் யூனியன் பிர­தேச உணவு பாது­காப்பு அமைப்­புகள் மேற்­கொள்ள வேண்டும். 

செய்தித் தாள்­களில், உண­வுகள், தின்­பண்­டங்கள் உள்­ளிட்­ட­வற்றை மடித்துக் கொடுக்கும் வழக்­கத்தை, அறவே நீக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.