Breaking News
recent

முஸ்லிம்களின் முன்மாதிரி, கிறிஸ்த்தவர்களுக்கு கொண்டாட்டம்!


லண்­ட­னி­லுள்ள யாசர்­க­ளுக்­காக நத்­தாரை முன்­னிட்டு 10 தொன் உணவுப் பொருட்­களை பிரித்­தா­னிய முஸ்­லிம்கள் அன்­ப­ளிப்­பாக வழங்­கி­யுள்­ளனர்.

முஸ்லிம் எய்ட் அமைப்பின் உத­வி­யுடன் கிழக்கு லண்டன் பள்­ளி­வாசல் மற்றும் லண்டன் முஸ்லிம் மத்­திய நிலையம் ஆகி­ய­வற்றின் ஏற்­பாட்டில் இப்­ பொ­ருட் கள் சேக­ரிப்­பட்­டன.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை தொழு­கையின் பின்னர் முஸ்­லிம்கள் இந்த உண­வுப்­பொ­ருட்­களை அன்­ப­ளிப்­பாக வழங்­கி­யுள்­ளனர். சுமார் 7500 பேர் பொருட்­களை அன்­ப­ளிப்புச் செய்­த­தா­கவும் இதன்மூலம் 10 தொன் உணவுப் பொருட்கள் சேக­ரிக்­கப்­பட்­ட­தா­கவும் பிரித்­தா­னிய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

அரிசி, நூடில்ஸ், தக­ரத்தில் அடைக்­கப்­பட்ட உண­வுகள் போன்ற பொருட்கள் சேக­ரிக்­கப்­பட்ட பொருட்­களில் அடங்­கி­யி­ருந்­தன. பள்­ளி­வா­ச­லுக்கு வந்­தோரால் 7 தொன் பொருட்கள் அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­ட­தா­கவும் உள்ளூர் வர்த்­கத நிறு­வ­னங்கள், பாட­சா­லைகள், பல்­ க­லைக்­க­ழகம் ஆகி­ய­னவும் பொருட்­களை வழங்­கி­ய­த­ாகவும் தெரிவிக் ­கப்­ப­டு­கி­றது.

சேக­ரிக்­கப்­பட்ட பொருட்­களில் 90 சத­வீ­த­மா­னவை யாச­கர்­க­ளுக்­கான தொண்டர் அமைப்­புகள் மூலம் முஸ்­லிம்கள் அல்­லா­த­வர்­க­ளுக்கு கிறிஸ்­மஸை முன்­னிட்டு விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

“கிழக்கு லண்டன் பள்­ளி­வா­சலின் பிர­தம இமாம் ஷேக் அப்துல் கையும் இது தொடர்­பாகக் கூறு­கையில், முஸ்­லிம்கள் தமது மத நம்­பிக்­கை­களால் ஏனை­ய­வர்­க­ளுக்கு உத­வு­வ­தற்கு ஊக்­கு­விக்­கப்­ப­டு­கி­றார்கள்.

ஒரு நபரின் நம்­பிக்கை, பின்­னணி குறித்த பாகு­பா­டின்றி, தேவை­யுள்­ள­வர்­க­ளுக்கு உத­வு­வது முஸ்­லிம்­களின் கட­மை­யாகும்” எனத் தெரி­வித்­துள்ளார்.

இந் ­ந­ட­வ­டிக்­கையை பாராட்­டிய கிறிஸ்­தவ மத­கு­ரு­வான கெறி பிரட்லி, அனைத்து மதங்­களும் பொது­வான மனி­தா­பி­மா­னத்தை நோக்கி செயற்­ப­டு­கின்­றன என்­ப­தற்கு இது ஓர் உதாரணம் எனக் கூறியுள்ளார்.

பிரிட்டனில் கடந்த வருடம் 3500 பேர் வீடின்றி தினமும் வீதிகளில் உறங்கியதாக அரசாங்க புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 30 சதவீத அதிகரிப்பாகும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.