Breaking News
recent

ஏன் இஸ்லாத்தைத் தழுவினேன் என்பதற்கான 13 உறுதியான காரணங்களை வெளியிட்டார்.!


இங்கிலாந்து நாட்டின் பிரசித்திப்பெற்ற உதைப்பந்தாட்ட வீரர். சமீபத்தில் இஸ்லாம் மதத்தை தழுவி, ஏன் இஸ்லாத்தைத் தழுவினேன் என்பதற்கான 13 உறுதியான காரணங்களை வெளியிட்டார்.
.
1. ஏசு நாதர் (நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்), 'ஓர் இறைவனே உள்ளான், ஓர் இறைவனே வணங்கப்பட வேண்டும் என கற்பித்தார்கள். (டியூட் 6:4, மார்க் 12:29).

முஸ்லிம்களும் இதையே நம்புகிறார்கள். (திருக்குர்ஆன் 4:171)
.
2. ஏசு நாதர் ஒருபோதும் பன்றி இறைச்சி சாப்பிடவில்லை. (லெவிட்டிகஸ் 11:7)

அதே போல் முஸ்லிம்களும் சாப்பிடுவது இல்லை (திருக்குர்ஆன் 6:145.)
.
3. ஏசுநாதர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற வார்த்தைகளால் வாழ்த்துக் கூறினார். (ஜோன் 20:21.)

இது போலவே முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறிக் கொள்கிறார்கள்.
.
4. ஏசுநாதர் எப்போதும், "இறைவன் நாடினால்" (இன்ஷா அல்லாஹ்) என்றுக் கூறினார்கள்.

முஸ்லிம்கள் திருக்குர்ஆன் வாசகங்கள் கூறுவது போல், எதைச் செய்வதானாலும் முதலில் இதைச் சொல்லிவிடுகிறார்கள். (திருக்குர்ஆன் 18:23-24)
.
5. ஏசுநாதர் தொழுகைக்கு முன் தன்னுடைய முகம், கைகள், பாதங்களைக் கழுவினார்கள்.

முஸ்லிம்களும் அதையே செய்கிறார்கள்.
.
6. ஏசுநாதரும் பைபிலில் குறிப்பிடப்படும் ஏனய நபிமார்களும் தங்களின் சிரசை நிலத்தில் வைத்தே தொழுதுள்ளார்கள். (மத்தீயு: 26:39.)

திருக்குர்ஆன் கற்றுக்கொடுத்தது போல் முஸ்லிம்களும் அப்படியே தொழுகிறார்கள். (திருக்குர்ஆன் 3:43)
.
7. ஏசுநாதர் தாடி வைத்திருந்தார்கள். நீண்ட அங்கியை அணிந்திருந்தார்கள். முஸ்லிம் ஆண்களும் அதே போல் செய்துக்கொள்கிறார்கள்.
.
8. ஏசுநாதர் கட்டளைகளைப் பின்பற்றினார்கள். எல்லா நபிமார்களையும் நம்பினார்கள். (மத்தியு 5:17.)

திருகுரானிய வசனங்கள் 3:84, 2:285 கூறுவது போல் முஸ்லிம்களும் அப்படியே செய்கிறார்கள்.
.
9. ஏசுநாதரின் தாயார் மேரி (மர்யம் அலைஹிஸ்ஸலாம்) தன் முழு உடலையும் மறைத்து, தலையில் முந்தானை (ஹிஜாப்) இட்டு ஒழுக்கமான ஆடை அணிந்திருந்தார்கள். (திமோத்தி 2:9, ஜெனஸிஸ் 24:64-65, கொரின்தியன்ஸ் 11:6.)

முஸ்லிம் மாதர்கள் திருக்குர்ஆன் போதிப்பது போல் இவ்வாறே ஒழுக்கமாக ஆடை அணிகிறார்கள்.
(திருக்குர்ஆன் 11:6.)
.
10. ஏசுநாதரும் பைபிலில் கூறப்படும் ஏனைய நபிமார்களும் 40 நாட்கள் வரை நோன்பு நோற்று உள்ளார்கள். (எக்சோடஸ் 34:28, தானியல் 10:2-6, கிங்ஸ் 19:8, மத்தீவ் 4:1.)

இதையே முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் செய்கிறார்கள். முஸ்லிம்கள் கடமையான 30 நாட்கள் நோன்பை நோற்க வேண்டும். (திருக்குர்ஆன் 2:183)
சிலர் ஒருபடி மேலேயேச் சென்று, 6 நாட்கள் மேலதிக நோன்பையும் நோற்று நற்கூலிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
.
11. ஒரு வீட்டினுள் நுழையும் போது, "இந்த இல்லத்திற்கு சாந்தி சமாதானம் உண்டாகட்டும்" என்று கூறுமாறு ஏசுநாதர் கற்பித்துக் கொடுத்தார்கள். (லூக் 10:5)

ஏசு நாதர் செய்த, கற்பித்துத் தந்த அதனையே முஸ்லிம்களும் செய்கிறார்கள். நாம் இல்லங்களுக்குள் நுழையும்போதும் மற்றவர்களுடைய இல்லங்களுக்குள் நுழையும்போதும் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறுகிறோம். (திருக்குர்ஆன் 24:61)
.
12. ஏசுநாதர் 'கத்னா' செய்யப்பட்டிருந்தார்கள். முஸ்லிம் ஆண்கள் கத்னா செய்யும்படி கேட்கப்பட்டுள்ளார்கள். ஏசுநாதர் எட்டு நாட்கள் பாலகராக இருக்கும்போது கத்னா செய்யப்பட்டார்கள். (லூக் 2:21)

முஸ்லிம்கள் நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும்படி கட்டளையிடப்பட்டுள்ளார்கள். (திருக்குர்ஆன் 16:123)
நபி முஹம்மத் ﷺ அன்னவர்கள் கூறினார்கள், "நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் 80 வயதாக இருக்கும்போது கத்னா செய்துக்கொண்டார்கள்."
.
13. ஏசுநாதர் அரமாயிக் மொழியையே பேசினார்கள். இறைவனை "எல்லாஹ்" என்று அழைத்தார்கள். அது "அல்லாஹ்" என்றே உச்சரிக்கப்படும். அரமாயிக் "எல்லாஹ்"வும் அராபிய "அல்லாஹ்"வும் ஒன்றே.
.
ஆகவே ஏசுநாதரின் இறைவனும் முஸ்லிம்களினதும் முழு மனித குலத்தினதும் இறைவனும் ஒன்றே என்பதையும் அவன் மாத்திரமே உள்ளான் என்பதையுமே இவை யாவும் நிரூபிக்கின்றன.
.
இப்போது சொல்லுங்கள், யார் ஏசுநாதரை உண்மையாகப் பின்பற்றுபவர்கள்.
.
E. Adebayor
E. எடேbபேயர்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.