Breaking News
recent

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பாங்கு சொல்லி அதிர வைத்த இஸ்லாமிய உறுப்பினர்.!(வீடியோ இணைப்பு)


இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்கள் பாங்கு சொல்வதற்கு தடைவிதிக்கும் மசோதா தொடர்பாக பேச்சு பிரதமர் நேதன்யாஹூ தலைமையில் நடைபெற்றுள்ளது. அப்பொழுது எழுந்து சென்ற அஹமது திபி என்ற இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து சென்று, அழகிய ராகத்தில் பாங்கு சொன்னார்.

 இதனை சற்றும் எதிர்பார்த்திராத யூத விரோதிகள், அவரை அமரும் படி கூச்சலிட்டனர். இருப்பினும் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத அஹமது திபி பாங்கும், பின்னர் பாங்கு துஆவையும் கூறிய பின்னர் புன்முறுவலுடன் இருக்கையில் அமர்ந்தார். 

இந்த செயல் யூதர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அத்தனை இஸ்லாமிய எதிரிகளின் முன்னர், ஒரு இஸ்லாமிய விரோத நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், பாங்கு சொன்ன நிகழ்வு காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.