Breaking News
recent

ஷார்ஜா புத்தகக் கண்காட்சி புதிய சாதனையுடன் நிறைவு.!


உலகின் 3 வது பெரிய புத்தகக்  கண்காட்சியான ஷார்ஜா புத்தகத் திருவிழா 1982 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த வருட 35வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி மொத்தம் 2.31 மில்லியன் பார்வையாளர்கள் வருகை என்ற புதிய சாதனையுடன் நிறைவு பெற்றது.

நடப்பு நவம்பர் 2 முதல் 12 ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற்ற இந்தக் புத்தகத் திருவிழாவில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு சுமார் 176 மில்லியன் திர்ஹத்திற்கு புத்தக விற்பனை நடந்துள்ளது. 60 உலக நாடுகளை சேர்ந்த 1681 புத்தகப் பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் சுமார் 1.5 மில்லியன் தலைப்புக்களில் புத்தகங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் பரப்பியிருந்தனர்.

ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் பொதுமக்களுடன் 600க்கு மேற்பட்ட பள்ளிக்கூடங்களிலிருந்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பாகும்.

Source: Emirates 247
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.