Breaking News
recent

துபாயில் விபத்தில்லா டாக்ஸி ஓட்டுனர்கள் கெளரவிப்பு.!


விதி வலியது என்பார்கள், பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்ததுடன் சர்வதேச உறவுகள் குறித்த பாடத்தில் முதுகலை பட்டம் (Masters in International Relations) பெற்றவருமான 39 வயதுடைய முன்தஸிர் ஹூசைன் என்பவர் துபையில் 2008 ஆம் ஆண்டு முதல் துபை போக்குவரத்து துறைக்கு (RTA) சொந்தமான துபை டேக்ஸி கார்ப்பரேசனில் (DTC) டேக்ஸி ஒட்டி வருகிறார்.

அது மட்டுமல்ல கடந்த 9 வருடங்களாக எவ்வித விபத்துக்கள் ஏற்படுத்தாமலும், சாலை விதிமீறல் அபராதங்கள் ஏதுமின்றியும், இதுவரை எந்த வாடிக்கையாளரும் இவர் மீது சிறு புகார் கூட தெரிவிக்காத நிலையில் டேக்ஸி ஒட்டியதற்காகவும் துபை சாலை போக்குவரத்து துறையால் கொளரவிக்கப்பட்ட 50 சிறந்த டேக்ஸி ஓட்டுனர்களில் இவர் முதன்மையானவர்.

துபையில் சட்டத்துறை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வேலை தேடியவருக்கு கடைசியாக கிடைத்ததோ டேக்ஸி ஓட்டுனருக்கான பணி தான், கிடைத்த வேலையை பொருந்திக் கொண்டு செய்வதால் வாழ்க்கையும் திருப்தியாக செல்கிறதாம்.

அதேபோல், கடந்த 3 வருடத்தில் விபத்திலாமல் டேக்ஸி ஓட்டியதற்காக கோஹர் அலி என்ற பாகிஸ்தானி ஓட்டுனரும், பிங்க் டேக்ஸி (Pink Taxi) எனப்படும் பெண்களுக்காக பெண் ஒட்டுனர்களால் இயக்கப்படும் டேக்ஸி பிரிவிலிருந்து 3 வருடங்களாக விபத்து ஏற்படுத்தாத ஓரே பெண் ஓட்டுனராக பிலிப்பைன்ஸை சேர்ந்த மெலானி மன்குலப்னான் என்பவரும் 50 பேரில் ஒருவராக கௌரவிக்கப்பட்டனர்.

Source: Gulf News

கோஹர் அலி


மெலானி மன்குலப்னான்


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.