Breaking News
recent

சுஷ்மா ஸ்வராஜுக்கு கிட்னி தானமாக வழங்க முன் வந்த முஸ்லிம் இளைஞர்கள்.!


சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மத்திய வெளியுறவுத்துறை அமைசர் சுஷ்மா சுவராஜுக்கு முஸ்லிம் இளைஞர்கள் இருவர் கிட்னி தானமாக வழங்க முன்வந்துள்ளனர்.
சுஷ்மா ஸ்வராஜ் சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக தானம் வழங்க உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த முஹிப் அன்சாரி என்ற இளைஞர் முன் வந்துள்ளார்.
முன்னதாக சிறுநீரக பாதிப்பினால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக சுஷ்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  அதேபோல நிஹ்மத் அலி சேக் என்ற இளைஞரும் சுஷ்மா ஸ்வராஜுக்கு கிட்னி தானமாக வழங்க முன்வந்துள்ளார்.
 இந்நிலையில் முஹிப் அவரது ட்விட்டர் பக்கத்தில், "சுஷ்மா மாம் , நீங்கள் என் தாயைப் போன்றவர். நான் உங்களுக்கு கிட்னி தானமாக தர முன் வருகிறேன். உங்கள் நீங்கள் விரைவில் குணமடையா அல்லாஹ்வை வேண்டுகிறேன்" என்று தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். (@SushmaSwaraj mam I am a BSP supporter and a Muslim, bt I want 2 donate my kidney 4 u,4 me u r like my mother figure, May allah bless u," he said on twitter.)
இதனிடையே இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சுஷ்மா ஸ்வராஜ், அவரது ட்விட்டர் பக்கத்தில் அந்த முஸ்லிம் இளைஞருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சுஷ்மா சுவராஜ் அவரது ட்விட்டரில்,"நன்றி சகோதரர்களே, நான் உறுதியாக சொல்கிறேன் கிட்னியில் எந்த மத அடையாளங்களும் இல்லை" (Thank you very much brothers. I am sure, kidney has no religious labels,)" என்று தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.