இந்த நிகழ்ச்சி கிரீன் குளோப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹுமைத் அபுபக்கரின் ஏற்பாட்டில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியின் போது மார்பகப் புற்றுநோயினால் பெற்றோர்கள் எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.
ஆண்டு தோறும் மார்பகப் புற்றுநோயினால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செயவதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிந்து அதிலிருந்து விடுபட முடியும் என அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியினை பார்த்த பார்வையாளர்கள் மிகவும் இளம் வயதிலேயே இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை செய்து வரும் மாணவ, மாணவியைரை பாராட்டினர்.
மேலும் சிறப்பான முறையில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெறுவதற்கு சைனா மால் நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக