Breaking News
recent

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுடன் உறவினர்கள் நண்பர்கள் செல்ல தடை.!


குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாயகம் செல்லும் வெளிநாட்டு தொழிலாளர்களுடன்(நபர்கள்) உறவினர்கள் நண்பர்கள் விமான நிலையத்தின் நுழைவு பகுதி( Departure) செல்ல தடை அமலுக்கு வந்துள்ளன. இதனால் Checkin பகுதிகளில் கூட்டம் அலை மோதுகிறது.என்று சில குவைத் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு நபரை அனுப்பி குறைந்து ஐந்து முதல் பத்து நபர்கள் வரையில் விமான நிலையத்தில் வருகிறார்கள். இதை தவிர மேலும் பல தேவைகளுக்கு பலர் விமான நிலையத்தில் நுழைவது அதிகாரிகள் கவனத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் பெரும் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் கடும் நெரிசல் பல நேரங்களில் ஏற்படுகிறது.
இதனால் தாயகம் செல்லும் நபர்களுடன் யாரும் நுழைய முடியாது.ஆனால் தாயகத்தில் இருந்து குவைத் வரும் நபர்களை அழைத்து வர எந்த தடையும் இல்லை.
இந்த புதிய உத்தரவை குவைத் விமான நிலைய புதிய பாதுகாப்பு உயர் போலீஸ் அதிகாரி வாலித் அல்-சாரே நேற்று (19/11/2016) பிறப்பித்துள்ளார்.

Source:Asianet news 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.