ராகுல்காந்தி கைதை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்புவும் நக்மாவும் பங்கேற்றனர்.
அந்த போராட்டம் முடிந்ததும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
கூட்டத்தில் குஷ்பு கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட நக்மா குஷ்புவின் கருத்துகுறித்து பேசும்போது, "பொது சிவில் சட்டம் பற்றி பேச குஷ்புவுக்கு எந்த அருகதையும் கிடையாது.
முஸ்லீமான அவர் சினிமாவில் பொட்டு வைத்து நடிப்பதில் தப்பில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஏன் பொட்டு வைக்கிறார்? கேட்டால் இந்துவை கல்யாணம் பண்ணியிருக்கேன் என்பார்.
அப்படி என்றால் முஸ்லிம் ஷரியத் சட்டம் பற்றி இவர் ஏன் பேச வேண்டும்? குரானில் ‘தலாக்‘ பற்றி இல்லை என்று பேசியிருக்கிறார். அவர் குரானை படிக்கவில்லை.
பார்த்து இருக்கவே மாட்டார். தலாக் பற்றி குரானில் தெளிவாகவே சொல்லப் பட்டுள்ளது.குஷ்புவின் தற்போதைய நடவடிக்கை குறித்து கட்சி மேலிடத்தில் தெரிவிப்பேன்
இவ்வாறு நடிகை நக்மா பேசினார்.
நக்மாவின் இந்த பேச்சு குறித்து கருத்து கூற குஷ்பு மறுத்துவிட்டார்.
nakma condemned kushboo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக