Breaking News
recent

வெளிநாட்டு வாழ்க்கை…இளமையை காவு வாங்கும் சோக சரித்திரம்…


அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…

போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப இந்தியா வறோம் – வயசு22…

தம்பி படிக்கிறான்,அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் எப்படியும் ஒரு 3 அல்லது 4 வருஷம் சம்பாதித்தே ஆகனும் – வயசு24…

அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடன அடைக்கனும்,அடுத்து தங்கச்சி கல்யாணம் இருக்கு,தம்பி படிப்பு முடிய ரெண்டு வருஷம் இருக்கு அதனால இன்னும் ஒரு 3 வருஷம் – வயசு26…

தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்கு போகனும் அதனால இன்னும் ஒரு 2 வருஷம் – வயசு28…

அப்பா அம்மா பொண்ணு பார்க்கறாங்க கல்யாணம் பண்ணனும் அதுக்கு பணம் சேர்க்கனும் அதுக்கு ஒரு 1 வருடம் – வயசு30…

கல்யாணத்துக்கு வாங்கின கடன் எல்லாத்தையும் முடிச்சி ஊரு போகனும் அதுக்கு ஒரு 2 வருஷம் – வயசு32…

பிள்ளைய ஸ்கூல் சேர்க்கனும்,அதுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கனும் அதுக்கு 2 வருஷம் – வயசு34…

ஒரு வீட்ட கட்டி முடிச்சிடனும் இத்தனை வருஷம் இருந்து ஒன்னுமே சம்பாதிக்கல அதுக்கு ஒரு 6 வருடம் – வயசு40…

புள்ளங்க படிக்குது இப்போ ஊருக்கு போக முடியாது பணம் வேணும் அதுக்கு இன்னும் 10 வருஷம் இருந்தே ஆகனும் – வயசு50…

புள்ளங்க படிப்ப முடிக்க இன்னும் 2 வருஷம் இருக்கு அதனால இன்னும் 3 வருஷம் – வயசு53…

புள்ளைகளுக்கு ஒரு வேலை கிடைக்கனும்,பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் அதனால இன்னும் 4 வருஷம் – வயசு57…

கல்யாணம் பண்ணி கொடுத்ததும் மாப்பிள்ளைகளுக்கு ஒரு தொழில் அல்லது ஏதாவது உதவிகள் செய்து கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது அதனால ஒரு 4 வருடம் – வயசு61…
அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது…
(WhatsApp story)
ஆம் பெரும்பாலானவர்களுக்கு இந்த வெளிநாட்டு வாழ்க்கை…இளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரமாகத்தான் இன்னமும் தொடர்கிறது. இதில் தப்பி பிழைது குடும்பத்துடன் வசிப்பவர்கள் சிலரே…
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.