ஒரு உறுப்பினரைக் கொண்ட குடும்ப அட்டைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 12 கிலோ அரிசியே தொடர்ந்து வழங்கப்படும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் 5 கிலோ மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அளவிலேயே அரிசி இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேபோல், 2, 3 மற்றும் 4 உறுப்பினர்களைக் கொண்ட ரேஷன் அட்டைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அளவிலேயே அரிசி வழங்கப்படும்.
5 உறுப்பினர்களைக் கொண்ட குடும்ப அட்டைக்கு 20 கிலோவில் இருந்து 25 கிலோவாக உயர்த்தி வழங்கப்படும். 6 உறுப்பினர்களுக்கு 30 கிலோவும், 7 உறுப்பினர்களுக்கு 35 கிலோவும் அரிசி வழங்கப்பட இருக்கிறது. 10 உறுப்பினர்களுக்கு 50 கிலோ அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக