Breaking News
recent

சில்லறை தட்டுப்பாடு; பயண செலவுக்கு இந்திய தெருக்களில் பிச்சை எடுத்த வெளிநாட்டினர்.!


மோடி அறிவித்த செல்லாத நோட்டு அறிவிப்பால் உள்நாட்டு மக்கள் தெருக்களில் நிற்க, வெளிநாட்டினர் தெருக்களில் பிச்சையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் புஸ்கர் நகரில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த இரண்டு குழுக்களைச் சேர்ந்த பயணிகள், தங்களுடைய பயணத்துக்காக வித்தைகளைக் காட்டி பிச்சை எடுத்துள்ளனர்.
ஆண்கள் இசைக் கருவிகளை வாசிக்க, பெண்கள் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைக் காண்பித்து புஸ்கரின் பிரம்மா கோயில் அருகே பிச்சையெடுத்த காட்சியை மக்கள் வேடிக்கைப் பார்த்தனர்.
தங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வங்கியிலிருந்தும் ஏடிஎம்மிலிருந்தும் எடுக்க முடியாததால் இப்படியான ‘முயற்சி’ என ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லிக்குச் செல்ல பணம் திரட்டி தங்கள் நாட்டு தூதரங்களிடம் உதவி கோர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.