Breaking News
recent

அல் அய்னில் 3 குழந்தைகள் கிணற்றுக்குள் தவறி விழுந்து மரணம்.!


அமீரகம், அல் அய்ன் நகரில் 2 வீடுகளைச் சேர்ந்த சுமார் 3 வயது முதல் 4 வயது வரை உள்ள அமீரக குழந்தைகள் நால்வர் பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். 

வீட்டின் கொல்லைப்புறத்தில் ஓடிய பூனையை துரத்தியபோது தவறுதலாக கிணற்றுக்கு மேல் போடப்பட்டிருந்த பலகை மீது ஓட, வலுவிழந்திருந்த பலகை எடை தாங்காமல் விழுந்து நொறுங்கியது.

கிணற்றை மூடியிருந்த பலகை உடைந்ததை தொடர்ந்து குழந்தைகள் 4 பேரும் கிணற்று நீரில் விழுந்து மூழ்க, சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் மரணமடைந்தனர். 

ஒரு குழந்தை மட்டும் பலத்த காயங்களுடன் தீயணைப்பு துறை வீரர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அல்லாஹ் குழந்தைகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு மன ஆறுதலை தந்தருள்வானாக!

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.