Breaking News
recent

துபாயில் நவீன போக்குவரத்து ரேடார் கேமராக்கள் பொருத்தும் பணி துவக்கம்.!


துபாயில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்ப நேர்த்தி மிகுந்த ரேடார் கேமிராக்களை நடைமுறையிலுள்ள பழைய போக்குவரத்துக் கேமிராக்களுக்கு பதிலாக பொருத்தும் பணி முதற்கட்டமாக 28 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கேமிராக்கள் புகைப்படம் எடுப்பதுடன் வீடியோ பதிவு செய்யக்கூடிய தன்மை வாய்ந்தவை. இந்தக் கேமிராக்கள் அதிக வேகம் செல்லும் வாகனங்களை மட்டுமின்றி தடம் மாறிச் செல்வோர், திடீர் என முன்னறிவிப்பின்றி வாகனங்களை திருப்புவோர், சிவப்பு விளக்கு சமிக்ஞைகளை மீறிச் செல்வோர், சிக்னல்களில் தனது வாய்ப்புக்காக காத்திராமல் குறுக்கே பாய்ந்து செல்வோர், சிக்னலில் மஞ்சள் கோட்டை மறித்து மறித்து நிற்போர் என அனைத்து போக்குவரத்து விதிமீறல் குற்றவாளிகளையும் படம் பிடிக்கும்.

Source: 7 Days
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.