Breaking News
recent

துபாயில் போக்குவரத்து குற்றங்களை பதியும் நவீன நடைமுறை.!


துபாயில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல் குற்றங்கள் மற்றும் விபத்துக்கள் தொடர்பான அபராத ஆணைகள் அனைத்தும் போக்குவரத்து போலீஸாரால் பேப்பர் வடிவில் எழுதி வழங்கப்பட்டு வருகின்றன.

ஸ்மார்ட் துபை எனும் சர்வதேச அளவில் மின்னனு நிர்வாகத்தில் முன்னேறிய நகராக துபையை மாற்றும்; 100 முன்முயற்சி கனவு திட்டத்தின் கீழ் சுமார் 1000 ஸ்மார்ட் சேவை ஆப்களை உருவாக்கும் நோக்குடன் செயல்பட்டுவரும் துபை அரசின் இலக்கில் ஒன்றாக துபை போக்குவரத்து போலீஸாருக்கு உதவும் இந்த புதிய "Smart Fine Ticket" எனும் ஆப் வெளியிடப்பட்டுள்ளது.

விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து தொடர்பான அபராத விபரங்கள் அனைத்தும் குரல் பதிவுகள் (Voice), படப் பதிவுகள் (Images) அல்லது நிரப்பப்பட்ட விண்ணப்பங்களாக (Filling the forms within the application) பதிவேற்றம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வாகனத்திற்குரியவர்களுக்கு "Smart Fine Ticket" வாயிலாக தெரிவிக்கப்படும் என துபை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Source: Emirates 247
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.