Breaking News
recent

மேக்கப் இல்லாமல் மனைவியை பார்த்தவுடன் டைவர்ஸ்.!


துபாயில் புதிதாக திருமணமான நபர், தன் மனைவியை மேக்கப் இல்லாமல் பார்த்து அடையாளம் தெரியவில்லை என விவாகரத்து செய்துள்ளார்.

கடற்கரைக்கு தன் மனைவியுடன் சென்ற அந்த நபர், நீச்சலடித்துவிட்டு வந்த அவரின் மனைவியின் உண்மையான முகத்தை பார்த்து அடையாளம் தெரியாமல், அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம்.

அளவுக்கதிகமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். 

இந்தச் சம்பவத்தில் மனமுடைந்தப் பெண், உளவியல் நிபுணர் டாக்டர் அப்துல் அஜிசிடம் உதவிக் கோரியுள்ளார். 

அந்த உளவியல் நிபுணர் ஊடகங்களில் அளித்த பேட்டியில், “அந்த பெண் திருமணத்துக்கு முன்னர்  பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை மறைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 

மேக்கப் போட்டு உண்மையான முகத்தை மறைத்து வந்த பெண், தன் கணவரிடம் பலமுறை உண்மையை சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. 

இனி அவர்கள் சேர்வது கடினம்” இவ்வாறு கூறியுள்ளார். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.