விமான நிலையங்களை சுற்றி 5 கி.மீ. பரப்பளவிற்கு குட்டி விமானங்களை இயக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் இந்த வருடத்தில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவம் ஆகும்.
இந்த குட்டி விமான ஊடுருவலால் தரையிறங்க வேண்டிய சுமார் 22 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இச்சம்பவத்தை தொடர்ந்து அல் வர்கா பகுதியில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற தவறான நடவடிக்கைகளால் குட்டி விமானங்களின் விற்பனைக்கு அபுதாபி முற்றிலும் தடைவிதித்துள்ள நிலையில் துபை அதிகாரிகள் மேலும் பல கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கும் குறிப்பிட்ட வகை குட்டி விமானங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களை விற்பதற்கும் தடை கொண்டு வர ஆலோசித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ரியல் எஸ்டேட், விவசாயம் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் வயல் சார்ந்த பணிகளுக்காக வணிக நோக்கில் பயன்படுத்தப்படும் சுமார் 400 குட்டி விமானங்கள் ஏற்கனவே முறையாக பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன.
Source: Gulf News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக