Breaking News
recent

சவூதி நீதித்துறை அமைச்சகத்தின் நேசக்கரம்.!


பொதுவாக, ஒரு சவுதி நாட்டவரை மணக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கிடையே சேர்ந்து வாழ்வதில் பிணக்கு ஏற்பட்டால், ஸ்பான்சர் என்ற முறையில் சவுதி நாட்டவர் எடுக்கும் முடிவுக்கும், இறுதியாக சவுதியை விட்டு வெளியேறுவதற்கும் அவர்களின் தயவையே எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

இனிமேல், சவுதி நாட்டு பிரஜைகளை மணந்துள்ள வெளிநாட்டவர்கள் தங்களுக்கிடையே பிணக்கு ஏற்பட்டு பிரிந்தால் அவர்கள் விஷயத்தில் நிரந்தரமான ஒரு முடிவை நீதிமன்றம் அறிவிக்கும் வரை அவர்கள் சவுதியில் தொடர்ந்து தங்கியிருக்கலாம்

 அச்சமயம் யாரும் அவர்களை கட்டாயப்படுத்தி சவுதியை விட்டு வெளியேற்ற முடியாது மேலும் தனது சார்பான கோரிக்கைகளை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல அங்கீகாரம் வழங்கப்பட்ட மூன்றாம் தரப்பாக ஒருவரையும் (Grant Power of Attorney to Third Party to follow up the case) நியமித்துக் கொள்ளலாம் என்ற சட்ட திருத்தத்தை அறிவித்துள்ளது.

Source: Arab News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.