Breaking News
recent

உலக முஸ்லிம்களுடைய இதயத்தை நோக்கி, ஏவுகணை ஏவப்பட்டுள்ளது - இமாம் சுதைஸ்.!


ஷியா பயங்கரவாதிகளால்  மக்காவை இலக்காக கொண்டு  ஏவபட்ட ஏவுகணை  ஒன்றரை பில்லியன் முஸ்லிம்களின்  இதயத்தை நோக்கி ஏவபட்டஏவுகணையாகும் - மக்காவின் இமாம் அப்துரஹ்மான் சுதைஸ் 

மக்காவை இலக்காக கொண்டு ஷியா பயங்கர வாதிகள் ஏவுகணை செலுத்தியதும் நடுவானில் சவுதி அரேபியா அதை அழித்ததும் நாம் அறிந்ததே
இது பற்றி மக்காவின் இமாமும் புனிதலங்களின் பராமரிப்பு குழு தலைவரும் ஆகிய அப்துரஹ்மான் சுதைஸ் இன்று -29- தனது உரையில்,

ஷியா பயங்கரவாதிகளால் மக்காவை இலக்காக கொண்டு  ஏவபட்ட ஏவுகணை ஒன்றரை பில்லியன் முஸ்லிம்களின்  இதயத்தை நோக்கி ஏவபட்டஏவுகணையாகும்

மக்காவும் ஹரமும் கஃபாவும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இதயம் போன்றதாகும்.

ஒவ்வொரு தினமும் தொழுகைகளில் கஃபாவை நோக்கி முஸ்லிம்கள் தங்கள் முகத்தை அமைத்து கொளகின்றனர்.

இறைவனாலும் இறைவன் நபியாலும் புனித தலம் என்று அறிவிக்கபட்டு இன்றுவரையிலும் உலக முஸ்லிம் சமுதாயத்தால் புனிதமாக நடத்தபட்டு வரும் ஒரு புனித தலத்தை ஏவுகணைக்கு இலக்காக்குவது மிக பெரிய அனியாய மாகும்

கஃபாவின் புனிதத்தை குலைக்க முனைபவாகளுக்கு கடுமையான தண்டனை இறைவனிடம் காத்திருக்கிறது.

கஃபாவின் புனிதத்தை குலைக்க முயன்ற ஆப்ரஹாமின் யானைபடைகளை அபாபீல் பறவை கூட்டத்தை வைத்து இறைவன் சிதறடித்தது போல் கஃபாவின் புனிதத்தை குலைக்க முனைபர்களை இறைவன் நாசமாக்குவான்.

அங்கே (மக்காவில்) அநீதியின் மூலம் குற்றம் செய்ய நாடுவோருக்கு துன்புறுத்தும் வேதனையை சுவைக்க செய்வோம். அத்தியாயம் அல்ஹஜ் வசனம் 25
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.