Breaking News
recent

துபாயில் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு.!


இந்தியாவில் தான் பணக்காரன் இன்னும் பணக்காரனாகிறான் ஏழை இன்னும் ஏழையாகிறான் என ஆற்றமாட்டாமல் புலம்புவோம் அது இப்போது அமீரகத்திலும்.

வளைகுடா நாடுகளில் ஒரு பக்கம் கடும் பொருளாதார பாதிப்புக்கள் மற்றும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத வேலையிழப்புக்கள் போன்ற அன்றாட நிகழ்வுகள், இதில் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் அல்லது இழுத்தடித்து சிங்கியடித்துக் கொண்டுள்ள நிலையில், பெரிய பதவியில் உள்ள சீனியர் ஊழியர்களுக்கு 2017 ஆம் ஆண்டு சம்பள உயர்வு கிடைக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

அதன்படி கணக்காளர்கள், நிதித்துறை ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மனிதவளத்துறை அதிகாரிகள், சட்டத்துறை வல்லுனர்கள் போன்றோர் பயன்பெறுவர் மேலும் இவர்களுக்கு சுமார் 2.5 சதவிகிதம் முதல் 6.5 சதவிகிதம் வரை சம்பள உயர்வு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.