Breaking News
recent

'ஜிம் உடையுடன் பள்ளிவாசலை, கடக்கும்போது ஆறுதலாய் உள்ளது' - மரியா லாரன்ஸ்.!


நான் gymkku செல்லும் வழியில் கடந்து செல்லும் தெருவில் ஒரு சேர ஒரு அந்தோனியார் கோவில் , சாய் பாபா கோவில் மற்றும் ஒரு இஸ்லாமிய வழிபாட்டு தளம் உள்ளது .

Gym உடையுடன் நான் அந்த தெருவை கடக்கும்போதெல்லாம் அந்த அந்தோனியார் கோவில் வாசலில் உள்ள கிழங்கள் பார்க்கும் வக்கிர பார்வை வெளியே சொல்ல முடியாது , அப்படியே தாண்டி சாய் பாபா கோவில் வாசல் சேரும்பொழுது கையில் ப்ரசாதத்துடன் நிற்கும் பையன்களின் விசில் சத்தம் உள்ளே இருக்கும் பாபாவையே கூச்ச பட வைக்கும் படி இருக்கும் .

இவ்வளவு அருவருப்புகளுக்கு நடுவே கொஞ்சம் ஆறுதலாய் இருப்பது அந்த மசூதியை கடந்து செல்லும் அந்த 20 அடி தூரம்தான்.

அங்கே என்னை குத்தும் வக்கிர பார்வைகளும் இல்லை , விசில் முத்த சத்தங்களும் இல்லை .

தனிமனித விருப்பு வெறுப்புகளை தாண்டி மதம் சார்ந்த ஒரு ஒழுக்கமுறை அங்கு இருப்பதை என்னால் உணர முடிகிறது. I have observed this pattern on a wider scale.

மேலே சொன்ன விஷயங்கள் biased ஆகா பலருக்கு தோன்றலாம்.

ஆனால் ஒரு பெண்ணாக நான் எதிர்கொண்ட பல அனுபவங்களை வைத்து, சந்தித்த சூழல்களை வைத்து என்னால் இதை கூற முடிகிறது .

இதனால் மற்ற மதத்தை பின் பற்றும் ஆண்களிடம் ஒழுக்கம் இல்லை என்பது எனது வாதம் அல்ல .

குறைந்தபட்சம் தங்கள் வழிபாட்டு தளங்களின் முன்னிலாவது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல், உண்மை பக்தியோடு நடந்து கொள்ளலாமே என்கிற சின்ன வேண்டுதல் மட்டுமே .




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.