Breaking News
recent

"செல்பி", வாழ்க்கையை வெறுப்புகுறியதாக மாற்றுகிறது - ஆய்வில் தகவல்.!


கைபேசியில் செல்பி எடுக்கும் மோகம் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிலும் செல்பியை எடுத்து சமூகவலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பதிவேற்றுவதை பலர் அதிக அளவில் செய்து வருகின்றனர்.

அப்படி நாம் எடுக்கும் செல்பி புகைப்படங்களையோ அல்லது மற்றவர்கள் பதிவேற்றும் புகைபடங்களையோ திரும்ப திரும்ப பார்க்கும் போது பார்ப்பவருக்குள் ஒரு வித தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு வாழ்க்கை வெறுப்புகுறியதாக மாறுவதாக சமீபத்திய ஒரு ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

அதிலும் முக்கியமாக மற்றவர்கள் பதிவேற்றும் அவர்களின் புகைபடங்களை நாம் தொடர்ந்து பார்க்கையில் நாம் நம்முடைய சுயமரியாதையை இழப்பதாகவும் அமெரிக்காவில் ஒரு புகழ் பெற்ற பல்கலைகழகம் எடுத்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.