Breaking News
recent

துபாய் கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பால் தனித்தீவாக மாறும் பர்துபை.!


கடந்த 3 ஆண்டுகளாக தோண்டப்பட்டு வந்த துபை கால்வாயில் (Dubai Canal) இன்று முதன்முறையாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மனிதர்களால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பிரமாண்ட தீவு என்ற நிலையை துபையின் பர்துபை பகுதிகள் அடைந்தன. (Man made massive island)

இன்று சோதனை முயற்சியாக ஓரளவே கால்வாயினுள் தண்ணீர் திறக்கப்பட்டப்போதிலும் இன்னும் 2 வார காலத்தில் படிப்படியாக தண்ணீர் ஏற்றம் அதிகரிக்கப்பட்டு 6 மீட்டர் ஆழத்தை எட்டும்.


இந்த துபை கால்வாயின் மேல் 5 இடங்களில் நடைபாலங்களும் (Pedestrian Bridges) 1 இடத்தில் தொங்கு பாலமும் (Suspension Bridge) அமையவுள்ளதுடன் கால்வாயின் மேல் பிரமாண்ட அலங்கார வளைவு (Arch) ஒன்றும் வரவுள்ளது.


குறிப்பு:

இந்த தண்ணீர் திறப்பை எந்த அரசரோ, அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ பூக்களை தூவி வரவேற்கவில்லை என்பதுடன் எத்தகைய விழாக்களோ நடத்தப்படாதுடன் ஊடக விளம்பரமும் செய்யப்படவில்லை, தண்ணீர் திறந்துவிட்ட பிறகு செய்திகள் மட்டுமே தரப்பட்டன.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.