இன்று சோதனை முயற்சியாக ஓரளவே கால்வாயினுள் தண்ணீர் திறக்கப்பட்டப்போதிலும் இன்னும் 2 வார காலத்தில் படிப்படியாக தண்ணீர் ஏற்றம் அதிகரிக்கப்பட்டு 6 மீட்டர் ஆழத்தை எட்டும்.
இந்த துபை கால்வாயின் மேல் 5 இடங்களில் நடைபாலங்களும் (Pedestrian Bridges) 1 இடத்தில் தொங்கு பாலமும் (Suspension Bridge) அமையவுள்ளதுடன் கால்வாயின் மேல் பிரமாண்ட அலங்கார வளைவு (Arch) ஒன்றும் வரவுள்ளது.
குறிப்பு:
இந்த தண்ணீர் திறப்பை எந்த அரசரோ, அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ பூக்களை தூவி வரவேற்கவில்லை என்பதுடன் எத்தகைய விழாக்களோ நடத்தப்படாதுடன் ஊடக விளம்பரமும் செய்யப்படவில்லை, தண்ணீர் திறந்துவிட்ட பிறகு செய்திகள் மட்டுமே தரப்பட்டன.
Source: Gulf News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக