Breaking News
recent

துபாயில் நடைபெற்ற உலக கிளிஃப் டைவிங் போட்டி : ரசிகர்கள் உற்சாகம்.!


குன்றின் உயரத்தில் ஏறி நின்று பல்டி அடிக்கும் உலகப்போட்டியின் இறுதி சுற்று துபாயில் நடைபெற்றது. 2016 கிளிஃப் டைவிங் உலகப்போட்டிகள் அழகிய மாலை பொழுதின் நிலா வெளிச்சத்தில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே நடைபெற்றது. 

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மெரினா பியர் 7 கட்டிடத்தின் 20 மீட்டா உயரம் கொண்ட பீடத்தில் ஏறி பல்டி அடித்தனர்.   

இது பற்றி பேசிய போட்டியாளர் ஒருவர் இது தன்னுடைய முதல் வெற்றி என்றார். ஆச்சரியமான தருணம் என்ற அவர், துவக்கத்தில் இருந்தே வேகத்தை பிடித்ததாகவும், அதனால் தான் போட்டி முழுவதும் அதை நிலைநாட்ட முடிந்ததாக தெரிவித்தார். 


மற்றொரு போட்டியாளர் பேசுகையில், இந்த போட்டி ஏற்கனவே நடந்திருக்கலாம். ஆனால் இரவு நேரத்தில் நடந்தது இது தான் முதல் முறை என்றார். 

தன் முதல் வெற்றியை பதிவு செய்த பிரிட்டனின் கேரி ஹண்ட் ஆண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார். 

காலை நேரத்தில் அந்தரத்தில் பல்டி அடித்து பழகிய தங்களுக்கு, இரவு நேர போட்டி தங்களுக்கு சவாலானதாக அமைந்ததாக வெற்றி பெற்றவர்கள் தெரிவித்தனர்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.