Breaking News
recent

உயிர் புனிதாமானது என, அல்குர்ஆன் கூறுகின்றது - அமெரிக்காவில் பெரிய விளம்பரம்.!


இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்காவில் மாபெரும் விளம்பரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

மிஸுரி மாகாணம், செஸ்டர்ஃபீல்ட் பகுதியில் "ஐ.எஸ். அமைப்பு மோசமானது- இப்படிக்கு, உண்மையான முஸ்லிம்கள்' என்ற பொருள்படும்படியான ஆங்கில வாசகத்துடன் பெரிய விளம்பரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. 

பலகையின் ஒரு பகுதியில் "உயிர் புனிதமானது' என்று குர்ரான் வாசகம் கூறுவதாக குறிப்பிட்டுள்ளது.

 இதற்கான செலவை சவுண்ட்விஷன் ஏற்றுள்ளதாக அதன் கீழ் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த விளம்பரப் பலகையை வைக்க உதவிய தாரிக் மாலிக் கூறியதாவது: ஐ.எஸ்.ஸுக்கு எதிராக முஸ்லிம்கள் போதிய அளவு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்ற எண்ணத்தைப் போக்கும் விதமாக இதை அமைத்துள்ளோம்.

ஐ.எஸ்.ஸால் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று உணர்த்தும் விதமாக இந்த விளம்பரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

 நாங்களும் ஐ.எஸ்.ஸுக்கு எதிரானவர்கள் என்று உணர்த்த வேண்டிய அவசியமாகியுள்ளது என்றார்.

சிகாகோ நகரைச் சேர்ந்த சவுண்ட்விஷன் என்னும் தொண்டு அமைப்பு இது போன்ற முதல் விளம்பரப் பலகையை அமைத்தது. அதன் பிறகு அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற மாபெரும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.