Breaking News
recent

அமீரகத்திற்கு கடத்த முயன்ற 199 நட்சத்திர ஆமைகள் உயிருடன் பறிமுதல்.!


மும்பையில் இருந்து அமீரகத்திற்கு கடத்த முயன்ற 199 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவு 4 தள்ளுவண்டியில் 199 நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற 2 பயணிகள் பிடிபட்டனர். 

சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர்கள் 2 பேரும் அமீரக நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பது தெரியவந்தது. 

இவர்கள் நட்சத்திர ஆமைகளை மும்பையில் இருந்து வாங்கி அமீரகத்திற்கு கடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. 

இது தொடர்பாக அதிகாரிகள், கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் மீதும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளின் இன வகை குறித்து மாநில வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் கோரப்பட்டுள்ளது. 

இந்திய வனவிலங்கு சட்டப்படி, உயிருடன் ஆமைகள் ஏற்றுமதி, இறக்குமதி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

 இதுபோன்று கடத்தப்படும் உயிரினங்கள் இடையிலேயே இறந்து விடுவதும் உண்டு' என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Source: Khaleej Times
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.