உலக நாடுகளை போன்று சவூதி அரேபியாவின் சட்டமும் மனித கரங்களால் எழுதப்பட்டிருந்தால் அதிலுள்ள ஓட்டைகளை வைத்து இளவரசர் தண்டனையிலிருந்து தப்பித்திருப்பார்.
உலக நாடுகளை போன்று சவூதி அரேபியாவின் சட்டமும் மனித கரங்களால் எழுதப்பட்டிருந்தால் சட்டம் இளவரசருக்கு வளைந்து கொடுத்திருக்கும்.
ஆனால் சவூதி அரேபியாவின் சட்டம் அல்லாஹ்வுடைய சட்டம் என்பதால் 1400 ஆண்டுகளாக சட்டத்தை அசைக்கவும் முடியவில்லை, வளைக்கவும் முடியவில்லை,
ராஜ வம்சத்தை சேர்ந்த இளவரசரால் குர்ஆனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க இயலவில்லை.
கொலையுண்டவரின் குடும்பத்தினர் மனம் திருப்தியடைந்திருக்கும். நாட்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள்.
சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாள் ஆற்றிய உரையில்...
சவூதி அரேபியாவின் ஆட்சியும் சட்டமும் குர்ஆன், நபிவழி அடிப்படையிலேயே செயல்படும்.
என்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அநியாயமாக பாதிக்கப்பட்டால் அல்லாஹ்விடம் மறுமையில் நான் குற்றவாளியாக நிற்க வேண்டும். பொதுமக்கள் கண்ணீர் சிந்தினால் அல்லாஹ்விடம் நான் பதில் சொல்ல வேண்டும். நாட்டு மக்களை காக்க வேண்டிய பொறுப்பாளனாக நான் இருக்கிறேன்.
பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் யார் ஈடுபட்டாலும் சட்டம் தனது கடமையை செய்யும், என்னுடைய மகள் திருடினாலும் கையை வெட்டுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என்னுடைய மகன்கள், பேரன்கள் தவறு இழைத்தாலும் தண்டனை கடுமையாக இருக்கும். இறை சட்டத்தில் எந்தவித சமரசமும் கிடையாது என்றார்.
அவர் அன்று உறுதியளித்தது போல் தன்னுடைய நாட்டின் இளவரசர் என்றும் பாராமல், தன்னுடைய பேரன் என்றும் பாராமல் அல்லாஹ்வுடைய சட்டத்தை நிலைநாட்டி உலகத்தை உற்று நோக்க வைத்து விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக