செல்பேசிகளுக்கான பயன்பாட்டு கட்டண முறை, உணவு விற்பனை என அனைத்தையும் மக்கள் செல்பேசிமூலம் பயன்படுத்துகின்றனர்.
இந்த செல்பேசிகளுக்கு நாடுமுழுவதும் 10 இலக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளது. 100 கோடி இணைப்புகள் வரை இந்த 10 இலக்க எண்களைப் பயன்படுத்தலாம்.
இந்நிலையில், 10 இலக்க எண்களைப் பயன்படுத்திவரும் செல்போன் ஆபரேட்டர்களுக்கு 'நம்பர் தட்டுப்பாடு' ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்போது நடைமுறையில் இருக்கும் 10 இலக்க செல்பேசி எண்ணை மாற்றிவிட்டு, 11 இலக்க செல்பேசி எண்களை நடைமுறைப்படுத்த தொலைதொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அனைத்து செல்பேசி நிறுவனங்களிடம் இருந்து மிகவிரைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு, 30 ஆண்டுகள் எண் திட்டம் என்ற அடிப்படையில் இப்போதுள்ள செல்பேசி எண்கள் மத்திய தொலைதொடர்புத் துறையால் கொண்டு வரப்பட்டது.
ஆனால் செல்பேசியின் வளர்ச்சி, அதிகரித்துவரும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றால் தொலைதொடர்புத் துறை மறுஆய்வு செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் இப்போதுள்ள 10 இலக்க செல்போன் எண்களை மாற்றிவிட்டு, 11 இலக்க செல்போன் எண்களை நடைமுறைக்குக் கொண்டுவர தொலைதொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, இனி ஒவ்வொரு செல்போன் நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட வரிசை அடிப்படையில் 11 இலக்க செல்போன் எண்களைத் தர உள்ளன.
இந்த 11 இலக்க எண் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு, 10 இலக்க செல்போன் எண்களை 11 இலக்கமாக மாற்ற தொலைதொடர்புத் துறை அனைத்து செல்பேசி நிறுவனங்களுக்கும் ஆலோசனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக