Breaking News
recent

அமீரகத்தில் நவம்பர் 1 முதல் மீண்டும் பெட்ரோல் விலை ஏற்றம்.!


சர்வதேச அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கடந்த 2 ஆண்டுகளால் பலத்த விலை வீழ்ச்சியை சந்தித்து வருவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

அதில் ஒன்றாக மாதந்தோறும் சில்லறை பெட்ரோல் விலையிலும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து வருகின்றன.

சென்ற மாதம் 6 காசுகளை விலையேற்றிய அமீரகம் வரும் நவம்பர் மாதத்திற்கான விலையேற்றம் குறித்து அறிவித்துள்ளது. 

அதன்படி லிட்டர் ஒன்றுக்கு கீழ்க்காணும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன,

சூப்பர் 98 – 1.81 திர்ஹத்திலிருந்து 1.90 திர்ஹம் - ஏற்றம் 9 காசுகள்

சூப்பர் 95 – 1.70 திர்ஹத்திலிருந்து 1.79 திர்ஹம் - ஏற்றம் 9 காசுகள்

ஈ பிளஸ் 91 – 1.63 திர்ஹத்திலிருந்து 1.72 திர்ஹம் - ஏற்றம் 9 காசுகள்

டீசல் - 1.76 திர்ஹத்திலிருந்து 1.91 திர்ஹம் - ஏற்றம் 15 காசுகள்

கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பின் (Opec - Organisation of petroleum exporting countries) தீர்மானங்களை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டதால் கடந்த மாதம் பேரல் ஒன்று 48 டாலருக்கு விலையேற்றம் பெற்றது தற்போது மேலும் சற்றே உயர்ந்து சர்வதேச அளவில் 49.71 டாலருக்கும், அமெரிக்காவில் 48.70 டாலருக்கும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ஓபெக் நாடுகளின் தீர்மானத்தின்படி, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்காமல் உள்நாட்டு போரை காரணம் காட்டி ஈராக்கும், சர்வதேச பொருளாதார தடையால் பாதிக்கப்பட்டதை சமன்படுத்தும் நோக்கில் ஈரானும் உற்பத்தியை குறைக்க மறுத்து வருகின்றன. 

மேலும் லிபியா, நைஜீரியா போன்ற அரசியல் ஸ்திரமற்ற நாடுகளும் இந்த தீர்மானத்தை எந்தளவு பின்பற்றுகிறது என்பதும் பெரும் கேள்விக்குறியே. இந்நிலையில் ஒபெக் நாடுகளின் அடுத்த கூட்டம் நவம்பர் 30 அன்று வியன்னா நகரில் கூடவுள்ளது.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.