Breaking News
recent

துபாயில் அக்.1 முதல் 8 வரை ஜீடெக்ஸ் வர்த்தக கண்காட்சி.!


இந்த வருட இலையுதிர்கால ஜீடெக்ஸ் நுகர்வோர் (Autumn Gitex Shoppers) மின்னனு கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை, அக்டோபர் 1 தேதி துவங்கி அக்டோபர் 8 ஆம் தேதி சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்திலேயே (MENA) மிகப்பெரும் சில்லறை வர்த்தக மின்னனு பொருட்காட்சியாக திகழும் இதில் லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்புகள், டேப்லட்டுகள், HD டிவிக்கள், கையணிகள் (Wearables), ஸ்மார்ட் வாட்சுகள், டிஜிட்டல் கேமராக்கள், மின் விளையாட்டு சாதனங்கள், லேட்டஸ்ட் கேட்ஜெட்டுகள் (Gadgets) என பல்லாயிரக்கணக்கான தயாரிப்புகள் விற்பனைக்கும், பார்வைக்கும் வைக்கப்படவுள்ளன.

இந்த கண்காட்சியில் கலந்துவோர்கள் உட்பட நுகர்வோர்கள் என அனைவருக்கும் எதிர்பாரா வியப்பூட்டும் பரிசுகளும் (Surprise Prizes) காத்திருக்கின்றன. தினமும் காலை 11 முதல் இரவு 11 மணிவரை துபை வேல்டு டிரேட் சென்டரில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு நுழைவு கட்டணம் 35 திர்ஹம் ஆனால் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் புதன் அன்று வருவோருக்கு 30 திர்ஹம் மட்டுமே. டிக்கெட்டுகள் ஜீடெக்ஸ் அரங்க நுழைவாயிலிலும், ZOOM அவுட்லெட்களிலும், மெட்ரோ ஸ்டேஷன்களிலும் கிடைக்கும். டிராபிக் நெரிசலை தவிர்க்க துபை வேல்டு டிரேட் சென்டர் மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கி பொடிநடையாக மிகச்சில நிமிடங்களில் உள்ளே வரலாம்.

50 பேருக்கு மேற்பட்ட குழுவாய் வரும் மாணவர்களுக்கு டிக்கெட் விலை 10 திர்ஹம் மட்டுமே. 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் பெற்றோரின் பாதுகாப்புடன் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

உலகின் முன்னனி எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பாளர்களும், அதிகாரபூர்வ விநியோகஸ்தர்களும் மட்டுமே பங்குபெறும் இந்த மின்னனு கண்காட்சியில் கடந்த வருடம் சாதனை நிகழ்வாக 218722 பார்வையாளர்களும் 279 மில்லியன் திர்ஹத்திற்கு சில்லறை வர்த்தகமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.