அண்மையில் I.S. பயங்கரவாதிகள் பிரான்ஸை சார்ந்த கிறித்தவ மதகுரு ஒருவரை கொலை செய்தனர்.
இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்தை தீவிரவாதத்தோடு தொடர்ப்புபடுத்தும் பணியை பல ஊடகங்கள் செய்து வந்தன.
இதுதொடர்பாக உலக கிறித்தவர்களின் தலைவராக உள்ள போப் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது...
தீவிரவாதத்தோடு இஸ்லாத்தை தொடர்ப்புப்படுத்துவது தவறான செயல் என்றும், இஸ்லாத்திற்கும்
தீவிரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
மேலும் நான் சார்ந்துள்ள கிறித்தவ மதம் உட்பட அனைத்து மதத்திலும் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கும் சிறு சிறு குழுக்கள் உள்ளன என்றும் தீவிரவாத செயல்களை குறிப்பிட்ட குழுக்களோடு தொடர்புப்படுத்த வேண்டுமே தவிர அவர்கள் சார்ந்துள்ள மதத்தோடு தொடர்புப்படுத்துவது சரியல்ல என்றும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக