ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலர் ஏ. குதரத்துல்லா தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் எம். சுல்தான் மொய்தீன்,தமுமுக மத்திய மண்டல தேர்தல் அலுவலர் கே.ஏ. மீரான் மொய்தீன், துணை செயலர் ஹயாத் பாஷா, மாவட்ட பொருளாளர் முஹம்மது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை தலைவர் எப். முஹம்மது முனீர் மிஸ்பாஹி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் மீது அவதூறு பரப்பும் மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு உடந்தையாக இருக்கும் மகாராஷ்டிர அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.
இதில்,பள்ளிவாசல் தலைவர்கள் முகம்மது யூசுப், பாஷாமைதீன், அஹமது ஹீசைன், அல்லாபிச்சை, முஹம்மது உஸ்மான் மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச்செயலர் கோவை செய்யது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட துணைச்செயலர் ஜமீர்பாஷா வரவேற்றார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முஹம்மது ஹனீபா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக