வேலைக்காக லட்சக்கணக்கில் பணம் கடன் வாங்கி வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள், மீண்-டும் சொந்த நாடு திரும்புவதற்கு கூட பணம் இல்லாமல் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் ஒரு வேலை உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சவுதி அரேபயாவில் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உணவு இன்றி துன்பப்படுவதாகவும், அவர்களுக்கு உணவு வழங்க இந்திய தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
உணவின்றி உள்ள சகோதரர்களுக்கு உணவளிக்குமாறு வளைகுடா நாடுகள் வாழ் இந்தியர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சவுதி அரேபியாவிற்கு விரைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக