Breaking News
recent

துபாயில் ராஜஸ்தான் மாநில முதல்வருக்கு வரவேற்பு.!


துபாயில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கவுன்சிலின் சார்பில் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலின் தலைவர் குல்வந்த் சிங் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஜேம்ஸ் மாத்யூ வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்திய தூதர் டி.பி. சீத்தாராம் தொடக்கவுரை நிகழ்த்தினார். ராஜஸ்தான் மாநில முதல்வர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய வசுந்தரா, ராஜஸ்தான் மாநிலத்துக்கும், அமீரகத்துக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக தெரிவித்தார். அமீரகம் வியத்தகு வளர்ச்சியினை அடைந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய வர்த்தகர்கள் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துபாய் துணை ஆட்சியாளர் அலுவலக இயக்குநர் மிர்சா அல் சயீக், ராஜஸ்தான் மாநில ஊரக மேம்பாடு மற்றும் வீட்டுவசதித்துறை மந்திரி ராஜ்பால் சிங் செகாவத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.