Breaking News
recent

டிராபிக் ஃபைன் கட்டாமல் இனி அமீரகத்தை விட்டு விடுமுறைக்காக கூட வெளியேற முடியாது.!


அமீரகத்தின் மத்திய போக்குவரத்து சபையின் (Federal Traffic Council) அறிவித்தலின்படி, போக்குவரத்து துறை சம்பந்தப்பட்ட அபராதங்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் அமீரக குடியேற்றத்துறையுடன் (இமிக்கிரேசன்) இணைக்கப்படும் இதன்வழி போக்குவரத்து சம்பந்தப்பட்ட அபராதங்கள் செலுத்தப்படாமல் இருக்கும் நிலையில் நாட்டை விட்டு விடுமுறையிலோ அல்லது நிரந்தரமாகவோ வெளியேற அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள், நில வழி (All Kinds of Air, Sea & Land Ports) இமிக்கிரேசன் அலுவலகங்கள் என அனைத்திலும் அனுமதி மறுக்கப்படும்.

போக்குவரத்து அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு செல்லும் பயணிகளின் வசதிக்காக அனைத்து விமான நிலையங்களிலும் தானியங்கி இயந்திரங்கள் (Smart Devices & ATM) நிறுவப்பட்டு அதன்வழி அபராதங்களை செலுத்த வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

மோட்டார் பைக் ஒட்டுனர் லைசென்ஸ் இனி 2 வகையில் பிரித்து வழங்கப்படும். 200 வரை எஞ்சின் திறனுள்ள பைக்குகளை ஓட்ட 18 வயது பூர்த்தியானவர்களுக்கும், 200க்கு மேல் அதிக எஞ்சின் திறனுள்ள மோட்டார் பைக்குகளை ஒட்ட 21 வயது பூர்த்தியானவர்களுக்கும் லைசென்ஸ் வழங்கப்படும்.

தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு லைசென்ஸ் அனுமதி இனி 5 ஆண்டுகளாக குறைக்கப்படுவதற்கும், கனரக வாகனங்களான பஸ், டிரக் மற்றும் டேக்ஸிக்கள் அனுமதிக்கப்பட்ட வேக அளவை விட 20 km/h அதிகமாக செல்லலாம் என்பதும் ரத்து செய்யப்பட்டு 10 km/h வரை மட்டுமே அனுமதிக்கப்படவும் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் இறுதி உத்தரவுக்காக காத்துள்ளன.

மேலும், அமீரகம் முழுவதும் டிரக்குகளை இயக்குவதற்கான தடை செய்யப்பட்ட நேரங்கள் சீரான, ஒரேவிதமான நேரத்திற்கு மாற்றப்படவுள்ளன.அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் கூடுதலாக 50 சதவிகித வேகத்தில் செல்பவருடைய வாகனங்கள் பறிமுதல் செய்யவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.