இந்தியாவில் 95 சதவீத ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சில மொபைல் போன்களில் வாட்ஸ் ஆப் வசதி ரத்து செய்யப்படும் என கடந்த மார்ச் மாதத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால் உறுதிபடுத்தப்பட்ட தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் டிசம்பர் 31ம் தேதி முதல் கீழ்கண்ட ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பிளாக்பெரி, பிளாக்பெரி 10 ரக போன்கள், நோக்கியா எஸ் 40, நோக்கியா சிம்பியன் எஸ் 60, ஆண்ட்ராயிட் 2..1 ஆண்ட்ராய்ட் 2.2 ரக போன்கள், வின்டோஸ் போன் 7.1, ஐபோன் .-3ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ரக போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை ஸ்மார்ட் போன்களில் பாதுகாப்பு வசதிகள் குறைபாடு இருப்பதாக வாட்ஸ்ஆப் சேவை ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக