Breaking News
recent

இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் குடும்ப அட்டை.!


இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படும் என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுகுறித்து நிதிநிலை அறிக்கை வாசித்தபோது அவர் கூறியதாவது:-

பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளை கணினிமயமாக்குவதற்காகவும், குடும்ப அட்டை தகவல் தொகுப்பினை ஆதார் எண்ணுடன் ஒருங்கிணைக்கவும் ரூ.318.40 கோடியில் கணினி மயமாக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் 2016-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் அட்டைகள் வழங்குவதற்கு வகை செய்யப்படுவதுடன் இந்தத் திட்டச் செயலாக்கத்தில் உள்ள குறைகளைச் சீர்செய்து செம்மைப்படுத்தப்படும்.

மேலும் புதிய அட்டை வழங்குதல், இடம் பெயர்தல் போன்ற மாறுதல்களை இணைய வழியாக மேற்கொள்வதுடன், மக்களுக்கு எளிதில் பயனளிக்கும் வகையில் செயல்பாடுகள் துரிதமாகவும், எளிதாகவும் இருக்க வழிவகை செய்யப்படும் என்றார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.