Breaking News
recent

முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகளின் பிடியில், சிக்காமலிருக்க இஸ்லாமிய வகுப்புகள்.!


ஜேர்மனியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இஸ்லாம் வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஜேர்மனியில் கடந்த திங்கட்கிழமை மின்சார ரயிலில் ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் கோடாரியால் பயணிகளை தாக்கியதில் 21 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் பள்ளிகளில் இஸ்லாம் வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என Local Council சங்கத்தின் தலைவர் Gerd Landsberg தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களுக்கு இஸ்லாம் பற்றி கற்றுக் கொடுக்க இதுவே சிறந்த வழி எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வளர்ந்து வரும் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்காமல் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.

மேலும் முஸ்லிம் மத சங்கங்கள் பொறுப்பேற்று இதனை முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே ஆறு மாகாணங்களில் இஸ்லாம் வகுப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.