Breaking News
recent

காஷ்மீரில் சத்தமில்லாமல் நடந்து வரும் மனித நேயப் பணி.!


காஷ்மீரில் மிக உக்கிரமாக ராணுவத்துக்கும் பொது மக்களுக்கும் சண்டை நடந்து வருகிறது. கண்ட இடத்திலும் ஆர்ப்பாட்டக் காரர்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. 

இதனால் ஜீலம் நதிக்கு அப்பால் உள்ள பல குடும்பங்கள் சாப்பாட்டுக்கே உணவின்றி தவித்து வருகின்றன. 

அவ்வாறு சிரமப்படும் ஒரு குடும்பம்தான் திவான் சந்த் என்ற பண்டிட் குடும்பம். இவர் தனது பாட்டியோடும் மனைவியோடும் ஜீலம் நதிக்கு அப்பால் ஜவஹர் நகரில் வசித்து வருகிறார். 

பல நாள் நடந்த சண்டையில் இவர்கள் இருப்பிடத்துக்கு உணவு வழங்கப்படவில்லை. போக்குவரத்தும் 
நிறுத்தப்பட்டுள்ளது. 

திவான் சந்த் என்ற இந்த பிராமணர் ஆல் இந்தியா ரேடியோவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியிலிருக்கிறார். வசதியான குடும்பமாக இருந்தாலும் உணவு வந்து சேரவில்லை என்றால் என்ன செய்வார்கள்? 

கடைகள் கடந்த நான்கு நாட்களாக ஊரடங்கு உத்தரவால் திறக்கப்படவில்லை. திவான் சந்த் தனது குடும்ப நண்பரான ஜூபைதாவுக்கு தொலை பேசி மூலம் உணவு தேவை பற்றி சொல்லியுள்ளார். 

ஜூபைதாவும் அவரது கணவரும் வயதான பாட்டியோடு சிரமப்படும் திவான் சந்துக்கு உதவ உணவு பொருட்களோடு ஸ்ரீநகரிலிருந்து கிளம்புகின்றனர்.

'பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. சரியான சாலை வசதியும் இல்லை. எங்கள் உயிருக்கும் ஆபத்துதான். 

இருந்தாலும் சிரமப்படும் திவான் சந்த் குடும்பத்துக்கு இந்த உணவு பொருட்களை எப்படியும் சேர்த்து விடுவோம்' என்கிறார் ஜூபைதா.

ஒரு புறம் மோடிக்களும், அமீத்ஷாக்களும், தெகோடியாக்களும் இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்ணி மனித ரத்தம் குடிக்கின்றனர். 

மறுபுறம் இந்துக்களும் முஸ்லிம்களும் உடன் பிறவா சகோதர சகோதரிகளாக தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த அன்பும் பாசமும் இருக்கும் காலமெல்லாம் இந்துத்வா தனது தோல்வியை தொடர்ந்து தழுவிக் கொண்டுதான் இருக்கும்.

நன்றி-சுவனப்பிரியன் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.