Breaking News
recent

வன்முறையை ஒருபோதும் தூண்டியது இல்லை ஸ்கைப் மூலம் ஜாகீர் நாயக் விளக்கம்.!


வன்முறையை ஒருபோதும் தூண்டியது இல்லை என்று ஜாகீர் நாயக் ஸ்கைப் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

இஸ்லாமிய பிரசாரகர் ஜாகிர் நாயக்  தற்போது சவுதி அரேபியாவில் இருந்து வருகிறார். அங்கிருந்து ஸ்கைப் மூலம் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

பிரான்சில் உள்ள நைஸில் நடந்த தாக்குதலை கண்டிக்கிறோம். இத்தகைய தாக்குதல்கள் நடக்க கூடாது.

நான் டாக்கா தாக்குதலுக்கு தீவிரவாதிகளை ஒரு போதும் ஊக்குவித்தது இல்லை.

யாரையும் தீவிரவாதத்திற்கு தூண்டுவதில்லை. மீடியாக்கள் என்னை பற்றி தவறாக திரித்து செய்தி பரப்பி வருகிறது.

எனது வார்த்தைகள் மாற்றம் செய்யப்பட்டு மக்களுக்கு தவறானவற்றை பரப்புகிறார்கள்.

அமைதியை மட்டுமே விரும்புகிறேன். வன்முறையை ஒருபோதும் தூண்டியது இல்லை.

நான் சமாதனத்தின் ஒரு தூதுவன்.

நான் எந்த அரசுடன் 100 சதவீதம் பேச்சு வார்த்தை நடத்த ஒத்துழைப்பு அளிக்கிறேன்.

என் வாழ்நாளில் ஒரு போதும் அப்பாவி மக்களை கொல்ல ஊக்குவித்தது இல்லை.

உலகம் முழுவதும் எங்கு தீவிரவாதம் நடந்தாலும் நான் கண்டிப்பேன். என்னுடைய போதனையை நிறுத்த மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.